"கடன்பட்டார் நெஞ்சம் போல(போலும்?) கலங்கினான் இலங்கை வேந்தன்"-- இடஞ்சுட்டி விளக்கக் கோரியிருந்தார், சக வலைப்பதிவாளர் ஒருவர். அவர்சார்பில் விடைதேடி வலைப்பதிவுகளில் புகுந்தேன்.......
அய்யகோ!
வெவ்வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:
(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2)தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில்,இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு
கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.
இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக
இருக்கக்கூடுமோ?
விபரம் அறிந்தவர்கள் சரியான இடஞ்சுட்டி விளக்குவார்களா?
Wednesday, October 25, 2006
Thursday, October 19, 2006
அரசு (சமூக)ச் சர்வாதீனங்கள்,
(நிறைவுப்)போட்டி, சர்வாதீனம் (Perfect competition & Monopoly)-- இவையிரண்டில் எது சிறந்தது எனில், நிச்சயமாக போட்டிதான் சிறந்தது. போட்டிச்சந்தையில் விற்போரும் வாங்குவோரும் பலர்; சுய ஆதாயம் கருதி விலையைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது; ஓரியல்பான பொருட்கள்(homogeneous products);நியாயமான விலை('bon prix');ஒரே விலை;உற்பத்தியும் அதிகம்;காரணிகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகம்.
சர்வாதீனனுக்கு போட்டி இல்லை. அமிதலாபம்(Supernormal or abnormal profit) ஈட்டுவதே அவன் நோக்கம். எப்படி? 1)தனது பொருளுக்கு உயர்ந்தபட்ச விலை விதிக்கலாம். ஆனால் இது பொதுமக்களால் தாங்கக்கூடிய விலையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வருமான வரம்பிற்குள் இருக்கவேண்டும். இல்லாவிடில் வாங்குவது குறையும்;விற்பனை குறையும். 2)சர்வாதீனன் மற்றொரு உத்தியைப்பின்பற்றலாம். உற்பத்தியைக் குறைத்து விட்டால் பொருளுக்குத் தட்டுப்பாடு (பற்றாக்குறை) ஏற்படும். மக்களே போட்டிபோட்டு விலையை உயர்த்தி விடுவார்கள்.இம்முறைதான் சர்வாதீனனுக்கு அனுகூலமானது
போட்டிவிலையைக் காட்டிலும் சர்வாதீன விலை அதிகம்;போட்டி உற்பத்தியைக்காட்டிலும் சர்வாதீன உற்பத்தி குறைவு. எனவே போட்டியே சிறந்தது. ஆனால் நிறைவுப்போட்டி எங்கே உள்ளது? பாடநூல்களிலும் வகுப்பறைவிவாதங்களிலும் மட்டுமே உள்ளது.
அரசு(சமூக)ச் சர்வாதீனத்தால் (State or Social Monopoly) பொதுநலம் அதிகரிக்கும்;பெருவாரியான மக்களுக்கு பயன் கிட்டும். தனியார் சர்வாதீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் (குறைவான உற்பத்தி, அதிகவிலை, விலை பேதங்காட்டுதல்,வேலைவாய்ப்பு குறைதல்...........)
அரசுச்சர்வாதீனம் எப்பொழுது ஏற்படுகின்றது? சிலவற்றை தனியார்துறையில் விடுவது நாட்டுநலனுக்கு ஆபத்து (இராணுவம், போலீஸ், நீதித்துறை);சில தொழில்களில் தேவையான அளவிற்கு முதலீடு செய்ய தனியாரால் முடியாது (இந்திய ரயில்வே);சிலவற்றை நிர்வகிக்கத் தனியாரால் முடியாது (இரயில்வே,அஞ்சல்& தந்தி); சிலவற்றில் ஈடுபட தனியார் துறை முன்வராது ( வாடிகால், கழிவுநீர் வெளியேற்றம்)சில துறைகளால் தனியாருக்கு லாபமில்லை( குடிநீர், பூங்கா) இவைபோன்ற சமூகச்சர்வாதீனங்களால் சமூகநலன் அதிகரிக்கும். அவை நிரந்தரமானவை. நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் சமூகச்சர்வாதீனமே சிறந்தது
தனியார் சர்வாதீனம் காலப்போக்கில் மறையும்; அல்லது கட்டுப்படுத்தப்படும
சர்வாதீனனுக்கு போட்டி இல்லை. அமிதலாபம்(Supernormal or abnormal profit) ஈட்டுவதே அவன் நோக்கம். எப்படி? 1)தனது பொருளுக்கு உயர்ந்தபட்ச விலை விதிக்கலாம். ஆனால் இது பொதுமக்களால் தாங்கக்கூடிய விலையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வருமான வரம்பிற்குள் இருக்கவேண்டும். இல்லாவிடில் வாங்குவது குறையும்;விற்பனை குறையும். 2)சர்வாதீனன் மற்றொரு உத்தியைப்பின்பற்றலாம். உற்பத்தியைக் குறைத்து விட்டால் பொருளுக்குத் தட்டுப்பாடு (பற்றாக்குறை) ஏற்படும். மக்களே போட்டிபோட்டு விலையை உயர்த்தி விடுவார்கள்.இம்முறைதான் சர்வாதீனனுக்கு அனுகூலமானது
போட்டிவிலையைக் காட்டிலும் சர்வாதீன விலை அதிகம்;போட்டி உற்பத்தியைக்காட்டிலும் சர்வாதீன உற்பத்தி குறைவு. எனவே போட்டியே சிறந்தது. ஆனால் நிறைவுப்போட்டி எங்கே உள்ளது? பாடநூல்களிலும் வகுப்பறைவிவாதங்களிலும் மட்டுமே உள்ளது.
அரசு(சமூக)ச் சர்வாதீனத்தால் (State or Social Monopoly) பொதுநலம் அதிகரிக்கும்;பெருவாரியான மக்களுக்கு பயன் கிட்டும். தனியார் சர்வாதீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் (குறைவான உற்பத்தி, அதிகவிலை, விலை பேதங்காட்டுதல்,வேலைவாய்ப்பு குறைதல்...........)
அரசுச்சர்வாதீனம் எப்பொழுது ஏற்படுகின்றது? சிலவற்றை தனியார்துறையில் விடுவது நாட்டுநலனுக்கு ஆபத்து (இராணுவம், போலீஸ், நீதித்துறை);சில தொழில்களில் தேவையான அளவிற்கு முதலீடு செய்ய தனியாரால் முடியாது (இந்திய ரயில்வே);சிலவற்றை நிர்வகிக்கத் தனியாரால் முடியாது (இரயில்வே,அஞ்சல்& தந்தி); சிலவற்றில் ஈடுபட தனியார் துறை முன்வராது ( வாடிகால், கழிவுநீர் வெளியேற்றம்)சில துறைகளால் தனியாருக்கு லாபமில்லை( குடிநீர், பூங்கா) இவைபோன்ற சமூகச்சர்வாதீனங்களால் சமூகநலன் அதிகரிக்கும். அவை நிரந்தரமானவை. நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் சமூகச்சர்வாதீனமே சிறந்தது
தனியார் சர்வாதீனம் காலப்போக்கில் மறையும்; அல்லது கட்டுப்படுத்தப்படும
Wednesday, October 18, 2006
ஒப்பீட்டுக் கிரயக் கோட்பாடு
மா.சிவகுமாரின் இன்றைய பொருளியல் கட்டுரையின் பின்னூட்டத்தில் பொன்ஸ் ஓரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவருடைய பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் போட்டால் அது சிவகுமாரின் பதிவைவிடப் பெரிதாக உள்ளது. எனவே தனிப்பதிவாகவேப் பதிந்துள்ளேன்
ஒப்பீட்டுக்கிரயக் கோட்பாடு(தராதரச்செலவுக் கோட்பாடு).எழுதியவர், டேவிட் ரிக்கார்டோ (comparitive costs doctrine or theory by David Riccardo) காலம் 18 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள்
அனுமானங்கள்(Assumptions)1-உற்பத்திக்காரணி உழைப்பு( labour) மட்டுமே, 2-இரண்டே நாடுகள்; இரண்டு பொருட்கள் மட்டுமே உற்பத்தி ஆகும். 3-உழைப்பின் இடப்பெயர்ச்சிமீது தடை ஏதுமில்லை.4-சந்தையில் நிறைவு(பரிபூரண)ப்போட்டி நிலவுகின்றது.5-அரசு பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை(laissez faire)6-எடுத்துச்செல்லும் செலவு(transport costs)இல்லை 7-நீண்டகாலத்திற்கு மட்டுமே பொருந்தும்
எடுத்துக்காட்டு; இரண்டு நாடுகள்- கனவு நாடு & கற்பனை நாடு- உள்ளன. அவற்றில் இரு பொருள்கள் A & B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாட்டில் 100 தொழிலாளர்களைக் கொண்டு 100 A அல்லது 80 B உற்பத்தி செய்ய முடியும். கற்பனை நாட்டில் 100 தொழிலாளர்களைக்கொண்டு 80 A அல்லது 60 B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாடு A&B உற்பத்தியிலும் அனுகூல நிலையில்( advantageous position) உள்ளது; கற்பனை நாடு பிரதிகூல நிலையில் உள்ளது இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஆகும் உற்பத்திச்செலவை ஒப்பிட்டால் கனவுநாடு A உற்பத்தியிலும் , கற்பனைநாடு B உற்பத்தியிலும் அனுகூல நிலையில் உள்ளது தெளிவாகும். எனவே கனவுநாடு A பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும்; கற்பனைநாடு B பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் இதனால் மொத்த உற்பத்தி பெருகும்;விலை குறையும்;சிறப்புத்தேர்ச்சி ஏற்படும்
18 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரச் சூழ்நிலை மாறிவிட்டது; அனுமானங்களும் தவறானவை. எனவே இக்கோட்பாட்டை மறுத்து புதிய கோட்பாடுகள் உருவாகி உள்ளன. இருப்பினும் இக்கோட்பாட்டின் அடிப்படைக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்
ஒப்பீட்டுக்கிரயக் கோட்பாடு(தராதரச்செலவுக் கோட்பாடு).எழுதியவர், டேவிட் ரிக்கார்டோ (comparitive costs doctrine or theory by David Riccardo) காலம் 18 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள்
அனுமானங்கள்(Assumptions)1-உற்பத்திக்காரணி உழைப்பு( labour) மட்டுமே, 2-இரண்டே நாடுகள்; இரண்டு பொருட்கள் மட்டுமே உற்பத்தி ஆகும். 3-உழைப்பின் இடப்பெயர்ச்சிமீது தடை ஏதுமில்லை.4-சந்தையில் நிறைவு(பரிபூரண)ப்போட்டி நிலவுகின்றது.5-அரசு பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை(laissez faire)6-எடுத்துச்செல்லும் செலவு(transport costs)இல்லை 7-நீண்டகாலத்திற்கு மட்டுமே பொருந்தும்
எடுத்துக்காட்டு; இரண்டு நாடுகள்- கனவு நாடு & கற்பனை நாடு- உள்ளன. அவற்றில் இரு பொருள்கள் A & B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாட்டில் 100 தொழிலாளர்களைக் கொண்டு 100 A அல்லது 80 B உற்பத்தி செய்ய முடியும். கற்பனை நாட்டில் 100 தொழிலாளர்களைக்கொண்டு 80 A அல்லது 60 B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாடு A&B உற்பத்தியிலும் அனுகூல நிலையில்( advantageous position) உள்ளது; கற்பனை நாடு பிரதிகூல நிலையில் உள்ளது இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஆகும் உற்பத்திச்செலவை ஒப்பிட்டால் கனவுநாடு A உற்பத்தியிலும் , கற்பனைநாடு B உற்பத்தியிலும் அனுகூல நிலையில் உள்ளது தெளிவாகும். எனவே கனவுநாடு A பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும்; கற்பனைநாடு B பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் இதனால் மொத்த உற்பத்தி பெருகும்;விலை குறையும்;சிறப்புத்தேர்ச்சி ஏற்படும்
18 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரச் சூழ்நிலை மாறிவிட்டது; அனுமானங்களும் தவறானவை. எனவே இக்கோட்பாட்டை மறுத்து புதிய கோட்பாடுகள் உருவாகி உள்ளன. இருப்பினும் இக்கோட்பாட்டின் அடிப்படைக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்
Thursday, October 05, 2006
சிபி, பொன்ஸ்,ஜயராமன் அய்யங்கள்....
மா.சிவகுமார் எழுதும் பொருளாதாரக் கட்டுரைகளின் பின்னூட்டங்களில் நாமக்கல் சிபி, பொன்ஸ், ஜயராமன் ஆகியோர் சில வினாக்களை எழுப்பியுள்ளனர்.அவை பற்றி சிறு விளக்கங்கள்....
நாமக்கல் சிபி: நிறைய உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது சந்தைக்கு அனுப்பினால் தேவையும் அதிகரிக்கும்;நல்ல விலையிலும் விற்கலாமே!
செய்பொருள்தொழில்களில் (manufacturing industriees) இது ஓரளவு சாத்தியம். விளைபொருட்களை இருப்பில் வைப்பதற்குக் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் கிடைக்குமா? எலி,புழு,பூச்சிகளால் ஏற்படும் அழிவிலிருந்து (இந்தியாவின் மொத்த தாணிய உற்பத்தியில் 10% இப்படி நாசமாகின்றது)
ந்ப்படி காப்பாற்றுவது?விவசாயிகள் உடனடியாகத் தீர்க்க வேண்டியக்கடங்களை எப்படித் தீர்ப்பது?அடுத்த பருவத்திற்குவேண்டிய நடைமுறைச்செலவிற்கு என்ன செய்வது?
செய்பொருள்களை இருப்பில் வைக்கலாம். ஆயினும் மூலதனச்செலவுகள்? பருவ மாறுதல்கள்.மக்களின் சுவை ,விருப்பெச்சங்கள், பாவனை(tastes, preferences, fashion)மாறினால் தேவை பாதிக்கப்படும். பதிலிகள் தோன்றலாம்;புதிய பொருட்கள் வரலாம்.SALES! SALES! என்று கடைக்காரர்கள் ஏலம் போடுவதன்
தாத்பரியம் புரிகின்றதா?
நிறைய உற்பத்தி, ஸ்டாக் வைப்பது, அப்பப்போ ரிலீஸ் செய்வது....ம்..ஊஹும் ....நடைமுறை சாத்தியமற்றது
பொன்ஸ்:மரணமடந்தவர் தமது ஆயுட்காலத்திலேயே தமது சொத்திலிருந்து தீர்வை கட்ட ஒதுக்கீடு செய்திருந்தால் அது மரணத்தீர்வை எனப்படும்;மணமடைந்தவர் சொத்தில் இருந்து செலுத்தப்படும். இந்தியாவில் இத்தீர்வை விதிக்கப்படுவதில்லை
மரணித்தவர் தக்க ஏற்பாடு செய்யவில்லை. வரிசுகளுக்கு சொத்து கைமாறும். வாரிசுகள் தாம் அடைந்த சொத்தின் மதிப்பின் அடிப்படையில் தீர்வை செலுத்தினால் அது எஸ்டேட் ட்யூடி எனப்படும். இந்தியாவில் 1985 லிருந்து இது நீக்கப்பட்டுவிட்டது
ஜயராமன்:சமூகச்சர்வாதீனம் அல்லது அரசுச்சர்வாதீனத்தால்(social monopoly or state monopoly) அனைவருக்கும் நன்மையே! தனியார் சர்வாடீனத்தில் நிறைவுப்போட்டியைவிட விலை அதிகம்;உற்பத்தி குறைவு. ஆகவே வேலை வாய்ப்பு குறைவு. சர்வாதீனத்தைக் கட்டுப்படுத்த அரசு சட்டமியற்றும்பொழுது வழக்கமான முறைகேடுகள் ஏற்படவும் கூடும்
நாமக்கல் சிபி: நிறைய உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது சந்தைக்கு அனுப்பினால் தேவையும் அதிகரிக்கும்;நல்ல விலையிலும் விற்கலாமே!
செய்பொருள்தொழில்களில் (manufacturing industriees) இது ஓரளவு சாத்தியம். விளைபொருட்களை இருப்பில் வைப்பதற்குக் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் கிடைக்குமா? எலி,புழு,பூச்சிகளால் ஏற்படும் அழிவிலிருந்து (இந்தியாவின் மொத்த தாணிய உற்பத்தியில் 10% இப்படி நாசமாகின்றது)
ந்ப்படி காப்பாற்றுவது?விவசாயிகள் உடனடியாகத் தீர்க்க வேண்டியக்கடங்களை எப்படித் தீர்ப்பது?அடுத்த பருவத்திற்குவேண்டிய நடைமுறைச்செலவிற்கு என்ன செய்வது?
செய்பொருள்களை இருப்பில் வைக்கலாம். ஆயினும் மூலதனச்செலவுகள்? பருவ மாறுதல்கள்.மக்களின் சுவை ,விருப்பெச்சங்கள், பாவனை(tastes, preferences, fashion)மாறினால் தேவை பாதிக்கப்படும். பதிலிகள் தோன்றலாம்;புதிய பொருட்கள் வரலாம்.SALES! SALES! என்று கடைக்காரர்கள் ஏலம் போடுவதன்
தாத்பரியம் புரிகின்றதா?
நிறைய உற்பத்தி, ஸ்டாக் வைப்பது, அப்பப்போ ரிலீஸ் செய்வது....ம்..ஊஹும் ....நடைமுறை சாத்தியமற்றது
பொன்ஸ்:மரணமடந்தவர் தமது ஆயுட்காலத்திலேயே தமது சொத்திலிருந்து தீர்வை கட்ட ஒதுக்கீடு செய்திருந்தால் அது மரணத்தீர்வை எனப்படும்;மணமடைந்தவர் சொத்தில் இருந்து செலுத்தப்படும். இந்தியாவில் இத்தீர்வை விதிக்கப்படுவதில்லை
மரணித்தவர் தக்க ஏற்பாடு செய்யவில்லை. வரிசுகளுக்கு சொத்து கைமாறும். வாரிசுகள் தாம் அடைந்த சொத்தின் மதிப்பின் அடிப்படையில் தீர்வை செலுத்தினால் அது எஸ்டேட் ட்யூடி எனப்படும். இந்தியாவில் 1985 லிருந்து இது நீக்கப்பட்டுவிட்டது
ஜயராமன்:சமூகச்சர்வாதீனம் அல்லது அரசுச்சர்வாதீனத்தால்(social monopoly or state monopoly) அனைவருக்கும் நன்மையே! தனியார் சர்வாடீனத்தில் நிறைவுப்போட்டியைவிட விலை அதிகம்;உற்பத்தி குறைவு. ஆகவே வேலை வாய்ப்பு குறைவு. சர்வாதீனத்தைக் கட்டுப்படுத்த அரசு சட்டமியற்றும்பொழுது வழக்கமான முறைகேடுகள் ஏற்படவும் கூடும்
Subscribe to:
Posts (Atom)