Friday, December 29, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

இது ஒரு மீள்பதிவு

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன்.



அங்கே,


பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியை.


மற்றும் சிலர் சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!'

பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன. சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து
அப்படிஎன்னதான் பேசியிருப்பார்கள்?????

புதிர்....... எங்கே பதில்?


இந்தக் குழந்தை யார்?

Sunday, December 24, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன். அங்கே,
பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்,

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்,

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியையும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்!

மற்றும் சிலர்
சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!

'பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன.
சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து அப்படி
என்னதான் பேசியிருப்பார்கள்?

Sunday, December 17, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு-12-17-06

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. குறுகியகால அறிவிப்பு எனினும் 22 பதிவர்கள் வருகை தந்தனர். இறுதி நேரத்தில் இடம் மாற்றப்பட்டது எனினும் தொலைபேசித்தகவல் தகவல் கொடுக்கப்பட்டதால் பனகல் பூங்காவிற்குச் சென்று பின்னர் நடேசனார் பூங்காவிற்கு வந்தோரும் உண்டு. கடைசிநேர இடமாற்றம், ஊடுருவலைத் தடுத்தது.

பெண்பதிவர்களின் வருகை 100 % அதிகரித்தது!
ஆமாங்க! சென்றமுறை இருவர் வந்தனர்; இம்முறை நால்வர்! இது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம்!

துளசி கோபால், திருவள்ளுவர் ஆகியோரின் வருகையும் ஆக்கபூர்வ பங்கேற்பும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இரண்டுமுறை(விரும்பியோருக்கு அதற்கு மேலும்) பால் இனிப்புகள் வழங்கப்பட்டது.(காசு வசூலிக்கப்படவில்லை). பூங்காவிற்குள் காபி & டீ
எடுத்துவரக் கூடாது என்பதால் நோ காபி; நோ டீ!

புகைப்படங்கள் எடுக்கையில் இருவர் மட்டுமே மிஸ்ஸிங். பல காமிராக்கள் பலமுறை
கிளிக்கின!

இரவு 7 மணிக்குமேல் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.....

இனி, நண்பர்கள், சந்திப்பு பற்றிய தமது எண்ணங்களைத் தொடர்வார்கள்....................