Thursday, September 28, 2006

பழனிமலையில் முருகனா?

பெரியார்-ராஜாஜி நட்பு பற்றி விடாதுகருப்பு எழுதியிருந்தார். இது தொடர்பாக மேலும் இரண்டு செய்திகள்:

ஈ.வே.ரா மீது கோபங்கொண்ட அவரது தந்தையார் குடும்பச்சொத்துகளை பழனிமுருகன் பெயருக்கு எழுதிவைத்துவிட்டார்.
ஈ.வே.ரா, தமது ஆப்த நண்பரும் வழக்குரைஞருமான ராஜகோபாலாச்சாரியாரை(பிற்காலத்தில் ராஜாஜி) அணுகினார். அவரும் ஈ.வே.ரா சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார்.
அவர் முன்வைத்த வாதம்:'பழனிமலையில் உள்ளது முருகன் கோவில் இல்லை;அங்கு
தண்டாயுதபாணிக்குத்தான் கோவில் உள்ளது;
எனவே பழனிமுருகன் பெயருக்கு சொத்தை எழுதி
வைத்தது செல்லாதது' என்பதாகும்.
"எதிரிநண்பர் ஈ.வே.ரா"(உபயம்:ராஜாஜி) தமது நண்பரின் மதிநுட்பத்தை வியந்து இந்நிகழ்ச்சியைக்
குறிப்பிடுவார்.

இப்பதிவில் எவ்வித உள்குத்தும் இல்லை. இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதப்பட்டது